sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்  

/

டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்  

டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்  

டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்  


ADDED : அக் 02, 2024 11:36 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் ஏ.ஐ.டி.யூ.சி., டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பெரியசாமி தலைமை வகித்தார்.

மாநாட்டை ஏ.ஐ.டி.யூ.சி., தேசிய செயலர் மூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார்.

கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்

கேரளாவில் அமலில் உள்ளது போல, மதுபான கடைகள் நிர்வாக நடைமுறையை தமிழகத்திலும் டாஸ்மாக் நிறுவனம் அமல்படுத்த வேண்டும்

டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கும் மருத்துவ திட்டத்தை கைவிட்டு, அனைத்து பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளதைப் போன்று 60 வயதாக அறிவிக்க வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்; ஷிப்ட் முறையை அமல்படுத்த வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்படுவதும், வருவாய் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூகவிரோத சக்திகளிடமிருந்து பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் பிணையில் வர முடியாத வகையில் வழக்கு பதிய வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

இதுபோன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, அடுத்த ஆண்டு பிப்., 11ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, பணியாளர்கள் அறிவித்தனர்.






      Dinamalar
      Follow us