sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவதுாறு பரப்பிய ஓய்வு பெற்ற அதிகாரி கைது

/

அவதுாறு பரப்பிய ஓய்வு பெற்ற அதிகாரி கைது

அவதுாறு பரப்பிய ஓய்வு பெற்ற அதிகாரி கைது

அவதுாறு பரப்பிய ஓய்வு பெற்ற அதிகாரி கைது


ADDED : அக் 08, 2025 03:59 AM

Google News

ADDED : அக் 08, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கரூரில் கடந்த மாதம் 27 ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோரை, சென்னை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்தவகையில், காவல் துறை விரல் ரேகை பிரிவில் பணியாற்றி, ஓய்வு பெற்ற வரதராஜன், 64, 'யூடியூப்' சேனலில், கரூரில் நடந்த உயிரிழப்பை சுட்டிக்காட்டி, உளவுத்துறை செயலிழந்து விட்டதாக, அவதுாறு தகவல்களை பரப்பியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் வரதராஜனிடம் விசாரித்து, நேற்று கைது செய்தனர்.

இவர் 'யூடியூப்' சேனல்களில், முதல்வர் ஸ்டாலின் குறித்தும், தி.மு.க., அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்து பேட்டி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us