sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

30,000 கிலோ செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்பு; தலைவர் நாராயணன் தகவல்

/

30,000 கிலோ செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்பு; தலைவர் நாராயணன் தகவல்

30,000 கிலோ செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்பு; தலைவர் நாராயணன் தகவல்

30,000 கிலோ செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்பு; தலைவர் நாராயணன் தகவல்


ADDED : ஜன 13, 2025 07:34 AM

Google News

ADDED : ஜன 13, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் கூறியதாவது:

இஸ்ரோ ஏற்கனவே இரண்டு செயற்கைகோள்களை அருகருகே நிறுத்தி சாதனை படைத்துள்ளது. இது, சந்திராயன் 4 நிலவில் தரையிறங்குவதற்கு பயன்படும். இந்தியாவிற்கு விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்க இருக்கிறோம்.

அடுத்த கட்டமாக ஆட்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று வர இருக்கிறோம். தொலைத்தொடர்பு, தொலை உணர்வு நேவிகேஷன் சேட்டிலைட் ஏவுதல் போன்ற எதிர்கால திட்டங்கள் உள்ளன. நான் பொறுப்பேற்ற பிறகு அனைவருடனும் விரிவாக ஆலோசனை நடத்தி, அடுத்த திட்டங்கள் குறித்து அறிவிப்போம்.

குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதள பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை சுமந்துசெல்லும் ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us