sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்

/

'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்

'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்

'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்


ADDED : ஜூலை 19, 2025 04:18 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தரிசன கட்டண உயர்வு அறிவிப்பை, திரும்பப் பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின், சிறப்பு தரிசன கட்டணத்தை, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்த்தப் போவதாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது, கண்டனத்திற்கு உரியது. பணம் படைத்தவர்களும், அதிகார பலம் உடையவர்களும், எவ்வித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை, நடுத்தர மக்கள் மீது மட்டும், எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, கோவில்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலால், பக்தர்கள் அவதிப்படுவதை, அறநிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திராணியின்றி, கட்டண உயர்வு வாயிலாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா, இந்த ஹிந்து விரோத அரசு.

கோடி, கோடி ரூபாயாக கொள்ளை அடிக்கும், தி.மு.க., தலைவர்களுக்கு வேண்டுமானால், 50 ரூபாய் உயர்வு என்பது சாதரணமாக இருக்கலாம். ஆனால், நான்கு பேர் உடைய ஏழை குடும்பத்துக்கு, தரிசன கட்டணம், 400 ரூபாய் என்பது ஒரு நாள் ஊதியம்.

எனவே, ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இல்லையேல், அண்ணாமலையார் சாட்சியாக, தமிழக பா.ஜ., சார்பில், மிகப் பெரிய அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us