sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி

/

விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி

விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி

விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி


ADDED : டிச 13, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்திற்கு, 1.39 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு, சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் சைலபதி; 2020 ஜூலையில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் வழியாக காரில் சென்றார். காரை டிரைவர் ஓட்டினார். வேகமாக சென்ற கார், டீக்கடையில் மோதி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த சைலபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கணவரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி பொன்சித்ரா மற்றும் குடும்பத்தினர், சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சைலபதி மாதம், 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்ததாகவும், 2.44 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ் வரன் பிறப்பித்த உத்தரவு:

அஜாக்கிரதையாக டிரைவர் காரை ஓட்டியதில், இந்த விபத்து நடந்துள்ளது. அஜாக்கிரதையாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் இருந்த டீக்கடையில் மோதியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் சாட்சியம் அளித்துள்ளார். கார் உரிமையாளரும், காப்பீட்டு நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

விபத்து நடந்த போது, சைலபதியின் வயது, 31. வருமான வரி பிடித்தத்துக்கு பின், ஆண்டு வருமானமாக, 11.43 லட்சம் ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளார்.

எனவே, இழப்பீடு தொகையாக, 7.5 சதவீத வட்டியுடன், 1.39 கோடி ரூபாய் பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வட்டியுடன் இழப்பீட்டு தொகையை, 90 நாட்களில், சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம், 'டிபாசிட்' செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us