sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

/

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

41


ADDED : ஜூலை 05, 2024 11:59 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:59 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்; இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கூடுதல் நிவாரணங்களையும் தமிழக அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியதை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 5) விசாரித்தது. அப்போது, 'கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us