ADDED : செப் 08, 2011 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம் : கேரளாவில், பலத்த மழையால் சேதமடைந்த ரோடுகளை புதுப்பிக்க மத்திய அரசிடம், மாநில அரசு ரூபாய் ஆயிரம் கோடி எதிர்பார்ப்பதாக முதல்வர் உமன்சாண்டி தெரிவித்தார்.
அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு, இத்தகவலை தெரிவித்த முதல்வர், செப். 22 மற்றும் 23ம் தேதிகளில் தனது டில்லி பயணத்தின் போது இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

