sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்

/

பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்

பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்

பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்


ADDED : ஆக 11, 2025 05:25 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு, 16.96 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கம் மாந்தவை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை; சலவை தொழிலாளி.

இவர், 2023 பிப்ரவரி 11ல் விழுப்புரம் மாவட்டம் கீழ்பேட்டை கிழக்கு கடற்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி சாந்தி, கணவரின் இறப்புக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரிகிறது.

எனவே, மனுதாரர் குடும்பத்துக்கு, மேக்மா எச்.டி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக, 16 லட்சத்து 96,970 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us