sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2000 கோடி கால்நடை பராமரிப்பு கடன்

/

கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2000 கோடி கால்நடை பராமரிப்பு கடன்

கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2000 கோடி கால்நடை பராமரிப்பு கடன்

கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2000 கோடி கால்நடை பராமரிப்பு கடன்

1


ADDED : ஏப் 04, 2025 05:10 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கூட்டுறவு சங்கங்களில், பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன், 2000 கோடி ரூபாய் வழங்கப்படும்,'' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


* பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தை மதிப்பீடு செய்து, உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக, 9.34 கோடி ரூபாயில், 1437 'கிளவுட்' பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும்

* காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள, 129 தொகுப்பு பால் குளிர்விப்பான்களுக்கு தேவையான அதிநவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவிகள் வழங்கப்படும்

* பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க, 10 கோடி ரூபாயில், 500 ஆவின் பாலகங்கள் புதிதாக துவக்கப்படும்

* கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு, கால்நடை பராமரிப்பு கடனாக, 2000 கோடி ரூபாய் வழங்கப்படும்

* காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, வேலுார் உள்ளிட்ட, 14 மாவட்ட ஒன்றியங்களில், 2.40 கோடி ரூபாயில், 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்

* பால் கொள்முதல் செய்ய தேவையான, பால் பரிசோதனை உபகரணங்கள், 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்

* மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம், 2.23 கோடி ரூபாயில், கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்

* பால் உற்பத்தியாளர்களுக்கு, 72 லட்சம் ரூபாயில், தீவன விதைகள் வழங்கப்படும்

* உம்பளாச்சேரி இன பசு மாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த, 1.94 கோடி ரூபாயில், தேசிய பால் பதிவு திட்டம் செயல்படுத்தப்படும்

* பால் உற்பத்தியாளர்கள், 12,000 பேருக்கு, கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, 60 லட்சம் ரூபாயில் வழங்கப்படும். மாவட்ட அளவில், சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, 15 லட்சம் ரூபாய் செலவில், விருது வழங்கப்படும்

* செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும்

* கறவை மாடுகளில், மடி நோயை கண்டறிய, 15 லட்சம் ரூபாயில், 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்

* கறவை மாடுகளில், கன்று ஈனும் இடைவெளியை குறைக்க, 1.73 கோடி ரூபாயில், 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்

* பால் உற்பத்தியாளர்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழியாக, நுண்கடன் வழங்க, 'வெண் நிதி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி உருவாக்கப்படும்

* தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்

* தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்.






      Dinamalar
      Follow us