sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

/

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை


ADDED : மே 27, 2025 10:04 PM

Google News

ADDED : மே 27, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. தனது சகோதரி தேடசெல்விக்கு வாரிசு சான்றிதழ் கோரி 2014ல் உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனை பரீசிலித்து ஒப்புதல் வழங்க அரசு ஊழியர் அல்லாத உதவியாளரான செல்லபாண்டி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை மதுரை ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன் முன் நடந்தது. அரசு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். செல்லப்பாண்டிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1500 அபராதம் விதித்த நீதிபதி, அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us