ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்
ரூ.3 ஆயிரம் பொங்கல் ரொக்கப்பரிசு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: அன்றே சொன்னது தினமலர்
UPDATED : ஜன 04, 2026 02:35 PM
ADDED : ஜன 04, 2026 12:12 PM

சென்னை: தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் இருந்தது.
அதன்படி அரசு அதிகாரிகளிடம், முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தினமலர் நாளிதழ் டிச.,10ம் தேதி தலைப்புச்செய்தி வெளியிட்டிருந்தது.
அதில் குறிப்பிட்டதை போலவே, இன்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


