sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு

/

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு


ADDED : பிப் 13, 2025 01:06 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளன.

தமிழகம் முழுதும் 8,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை தற்போது, அரசு படிப்படியாக வழங்கி வருகிறது.

நேற்று போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2023ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்தவர்களுக்கான பணப்பலன் வழங்க, 396.09 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us