sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: தி.மு.க., கிளை செயலர் மீது எஸ்.பி., யிடம் புகார்

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: தி.மு.க., கிளை செயலர் மீது எஸ்.பி., யிடம் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: தி.மு.க., கிளை செயலர் மீது எஸ்.பி., யிடம் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: தி.மு.க., கிளை செயலர் மீது எஸ்.பி., யிடம் புகார்


ADDED : பிப் 08, 2024 08:18 PM

Google News

ADDED : பிப் 08, 2024 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாக 7.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தி.மு.க., கிளை செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவியிடம் புகார் கொடுத்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் மனைவி ரமீலா,32, இவரது அண்ணன் கனகராஜ் மனைவி ராஜகுமாரி,28, இவர்கள் இருவரும் பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவியிடம் புகார் மனு கொடுத்த அதில் தெரிவித்துள்ளதாவது:

பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த உறவினரான தி.மு.க., கிளை செயலரும், வி.ஆர்.எஸ்.புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பச்சமுத்து,59, என்பவர் திமுக கிளைச் செயலாளராகவும், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உர விற்பனை அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ரமீலாவிற்கு கிராம நிர்வாக உதவியாளர் பணியும், ராஜகுமாரிக்கு ரேஷன் கடை சேல்ஸ்மேன் பணியும் வாங்கி தருவதாக கூறி, கடந்த 2022 அக்., 27ம் தேதி ரமீலாவிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ராஜகுமாரியிடம் 4 லட்சம் ரூபாயும் பணம் வங்கி கொண்டு, வேலை பெற்றுத்தந்த பின், தலா ஒரு லட்சம் தர வேண்டுமென கூறி, இதுவரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திரும்பி கேட்டால் தராமல் ஏமாற்றி வருவதுடன், மிட்டல் விடுத்து வருகிறார். இதனால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, வாங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.

பச்சமுத்து மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்ற எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us