உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 27, 2026 07:32 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவை வடக்கு தொகுதி தேர்தல் பணி குறித்து ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் ஓட்டுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, பணியாற்றினர். உள்ளூரில் உள்ள பா.ஜ.,வினர் ஒத்துழைக்கவில்லை. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் பணியாற்றவில்லை.
' 'இவற்றை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினர். கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் ஆய்வு செய்வர், ' ' என்றனர்.
