sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரையாண்டு தேர்வுக்கு இடையே ஊரக திறனாய்வு தேர்வு; 9 ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

/

அரையாண்டு தேர்வுக்கு இடையே ஊரக திறனாய்வு தேர்வு; 9 ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

அரையாண்டு தேர்வுக்கு இடையே ஊரக திறனாய்வு தேர்வு; 9 ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

அரையாண்டு தேர்வுக்கு இடையே ஊரக திறனாய்வு தேர்வு; 9 ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி


ADDED : நவ 25, 2024 11:45 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்; அரையாண்டு தேர்வு இடையே டிச.14 ல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என 9ம் வகுப்பு மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

2024---25 ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.14 ல் திறனாய்வு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு டிச. 9 முதல் டிச. 23 வரை நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வுக்கு இடையே டிச.14 ல் திறனாய்வு தேர்வு வருவதால் மாணவர்கள் எதை படிப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டால் கிராம மாணவர்கள் பயனடைவர். மேலும் பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.1000 தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை மாதம் ரூ.1000 ஆக வழங்க வேண்டும். மாவட்டத்திற்கு 100 பயனாளிகள் என்பதை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us