ADDED : ஆக 17, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் ஆதி திராவிடர் உள்ளனர்.
இந்தியாவில், பாசிசத்தால் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழுக்கு இழைக்கும் அநீதியும் அதிகரித்து வருகிறது.
வரும் தேர்தலில், தமிழகத்தில், காவி கூட்டம் நுழைய முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி, தி.மு.க., ஆட்சி தான் மீண்டும் வரும் என்ற நிலையை உருவாக்க முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்தியாவில் ஒரு டைனமிக் லீடராக முதல்வர் உருவாகியுள்ளார்.
இந்த காலகட்டம் தேர்தலுக்காக மட்டுமல்ல. நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய காலமாகவும் இருந்து வருகிறது.
மெய்யநாதன், தமிழக அமைச்சர், தி.மு.க.,