sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சாட்டிலைட் போன்' சந்தேகம் சேலம் விமானம் தாமதம்

/

'சாட்டிலைட் போன்' சந்தேகம் சேலம் விமானம் தாமதம்

'சாட்டிலைட் போன்' சந்தேகம் சேலம் விமானம் தாமதம்

'சாட்டிலைட் போன்' சந்தேகம் சேலம் விமானம் தாமதம்


ADDED : மார் 12, 2024 01:28 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இருந்து சேலம் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல, நேற்று முன்தினம் காலை, 64 பயணிகள் காத்திருந்தனர். அவர்களின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிசோதித்தனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த, 35 வயது நபர், தெலுங்கானா மாநிலம் ைஹதராபாதை சேர்ந்த 30 வயது நபர் என, இருவரை பரிசோதித்த போது, அவர்கள் வைத்திருந்தது 'சாட்டிலைட் போன்'கள் என, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, நம் நாட்டில் சாட்டிலைட் போன் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.

அப்போது இருவரும்,' புவியியல் ஆராய்ச்சி வசதியுடன் கூடிய கருவிகள்' என்று கூறினர். ஆனாலும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரின் பயணத்தை ரத்து செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த கருவிகளை பறிமுதல் செய்தனர். இதனால், சென்னை - சேலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது; பயணியர் அவதிப்பட்டனர்.

விமான நிலைய போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். அதற்கான கருவிகள் தான் என்றனர்.

தொடர் விசாரணையில் அவை கருவிகள் தான் என உறுதி செய்யப்பட்டது. இருவரும் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்போலீசார் அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us