sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரக்கன்று பண்ணைகள் இணைப்பில்லை அரசின் 'இ - நர்சரி' திட்டம் முடக்கம்

/

மரக்கன்று பண்ணைகள் இணைப்பில்லை அரசின் 'இ - நர்சரி' திட்டம் முடக்கம்

மரக்கன்று பண்ணைகள் இணைப்பில்லை அரசின் 'இ - நர்சரி' திட்டம் முடக்கம்

மரக்கன்று பண்ணைகள் இணைப்பில்லை அரசின் 'இ - நர்சரி' திட்டம் முடக்கம்


ADDED : ஜன 02, 2025 11:09 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மரக்கன்று வினியோகம் செய்யும் பெரும்பாலான பண்ணைகள் இணைக்கப்படாததால், வனத்துறையில், 'இ - நர்சரி' திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பசுமை பரப்பை, 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக அதிகரிக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை தமிழகம் இயக்கம், 2022ல் துவக்கப்பட்டது.

இந்த இயக்கம் வாயிலாக, வனத்துறை மட்டுமல்லாது, பல்வேறு அரசு துறைகள், பொது மக்கள் ஒருங்கிணைந்து, அதிக அளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, 10 ஆண்டுகளில், 265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, 10 ஆண்டுகளில், 12,076 கி.மீ., பசுமை பரப்பு புதிதாக உருவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான மரக்கன்றுகள், வனத்துறை பண்ணைகளில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுதும் வனத்துறை சார்பில், 43 கோட்டங்களில், 260 இடங்களில் பண்ணைகள் செயல்படுகின்றன. இந்த பண்ணைகளுக்கு நேரில் சென்று தான் மரக்கன்றுகளை பெற முடியும். இதை எளிதாக்கும் வகையில், இ - நர்சரி என்ற, 'ஆன்லைன்' திட்டத்தை, வனத்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

எந்தெந்த பன்ணைகளில் என்ன வகை மரக்கன்றுகள் கிடைக்கும்; அதன் விலை உள்ளிட்ட விபரங்களை, பொது மக்கள் எளிதில் அறிய, இத்திட்டம் துவங்கப்பட்டது.

வனத்துறை சார்பில், www.nursery.greentnmission.com/ என்ற இணையதளம், இதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில், தற்போதைய நிலவரப்படி, ஒரு சில பண்ணைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பண்ணைகள், ஆன்லைன் முறையில் இணைக்கப்படாததால், இத்திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொது மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி, தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை பெற, இ - நர்சரி திட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு பண்ணையிலும் இருப்பு நிலவரம் குறித்த தகவல்கள், தினசரி இதில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இணைய இணைப்பு வசதி இல்லாதது, பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தொலைவான பகுதிகளில் உள்ள பண்ணைகளை இணைப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டன.

இதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அணைத்து நர்சரிகளின் விபரங்களையும், இத்தளத்தில் பார்க்கும் நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us