sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

/

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்


ADDED : ஜூலை 18, 2025 05:09 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மத்திய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இணைப்பு கல்லுாரியாக இருந்தது. தற்போது, 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனமாக, பல்கலைக்கழக மானியக்குழுவாலும், பல்கலைக்கழகத்தாலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அதற்கான நியமன பத்திரத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு, சாரதா கங்காதரன் கல்லுாரியின் துணைத் தலைவர் பழனி ராஜாவிடம் வழங்கினார். புதுச்சேரி மாநிலத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற முதல் தனியார் உயர்கல்வி நிறுவனமாகும். கல்லுாரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று இதுவரை 50க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா வரும் 28 ம் தேதி நடக்கிறது. இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, பேச்சுத்திறன், நுண் கலைத்திறன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல துறைகளில் சான்றிதழ் படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 2025-2026ம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

உயர்கல்வி பயில, தாங்கள் விரும்பும் பாடத்தை www.sgc.edu.in வாயிலாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0413-2280156, 93616 78999 எண்களிலும், info@sgc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us