ADDED : பிப் 27, 2026 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்து, அவருக்கு உதவி செய்வதற்காக வந்தவர் சசிகலா. அ.தி.மு.க.,வின் ரத்தத்தை உறிஞ்சி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்த குடும்பம் சசிகலா குடும்பம். அவரெல்லாம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது பழி சுமத்தலாமா? தர்மம் தன் வேலையை செய்ததால் தான், சசிகலா சிறை சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஓராண்டில், 56 கொலைகள் நடந்துள்ளன. போதை பொருள் நடமாட்டம், தமிழகம் முழுதும் அதிகரித்துள்ளது. ஓசூரில், சில நாட்களுக்கு முன், தி.மு.க., பிரமுகரின் மகன், அரசு அதிகாரியை காரை ஏற்றி கொன்றுள்ளார். அந்த காட்சிகள் பதிவாகி உள்ள 'சிசிடிவி' ஆதாரத்தை போலீசார் மறைக்கின்றனர்.
-முனுசாமி,
முன்னாள் அமைச்சர்,
அ.தி.மு.க.,

