ADDED : அக் 19, 2024 05:29 AM
மதுரை : சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட சில போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அங்கு சம்பந்தப்பட்ட துாத்துக்குடி மாவட்ட நீதிபதி, பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி ரகு கணேஷ் மனு செய்தார். அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரகு கணேஷ் மனு செய்தார்.
நீதிபதி ஜி.இளங்கோவன்: கீழமை நீதிமன்ற ஆவணங்களை இன்று (அக்.19) தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

