sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்

/

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்


ADDED : அக் 05, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 05, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள், 112 பேர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை, எல்சிவியர் நிறுவனத்துடன் இணைந்து, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 'ஸ்டான்போர்ட் - எல்சிவியர் ஸ்கோபஸ் - 2025'ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த சவிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் கல்வி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்த பட்டியலில், சவீதா கல்வி நிறுவனத்தின், 112 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில், இந்தியா அளவில், ஐ.ஐ.எஸ்.சி.,யை சேர்ந்த 134 விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, சவீதா கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த, 500 விஞ்ஞானிகளில், சவீதா கல்வி நிறுவன விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அதிகம்.

இதுகுறித்து, சவீதா கல்வி நிறுவனத்தின் வேந்தர் என்.எம்.வீரய்யன் கூறியுள்ளதாவது:

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்.சி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என, நினைக்கப்பட்ட சாதனையை, சவீதா கல்வி நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. இதன் வாயிலாக, அறிவியல் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என்ற புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us