sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது

/

சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது

சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது

சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது


ADDED : ஆக 24, 2011 12:22 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா குறித்த ஆபாச வீடியோ காட்சிகள் தொடர்பாக, சன்,'டிவி' சக்சேனா மற்றும் லெனின் கருப்பனுக்கும், விரைவில் சம்மன் அனுப்ப, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில், சன்,'டிவி'யில், நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது. இதுதொடர்பாக பெங்களூரு போலீசார் நித்யானந்தாவை கைது öய்தனர். இவை,'மார்பிங்' முறையில் தயாரிக்கப்பட்டது எனவும், இதை வெளியிடாமல் இருக்க, 100 கோடி வரை பேரம் நடத்தினர் என சமீபத்தில், நித்யானந்தா பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தினார். ரஞ்சிதாவும், நித்யானந்த பீடம் சார்பிலும், போலீசில் புகார் செய்யப்பட்டது.



இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., சேகர், டி.ஐ.ஜி., ஸ்ரீதர் மேற்பார்வையில், எஸ்.பி., பரணிக்குமார் விசாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், நித்யானந்தா சாமியார் சி.பி.சி.ஐ.டி., ÷ பாலீசில் நேரில் ஆஜரானார். நடிகை ரஞ்சிதாவிடமும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சன்,'டிவி' சக்சேனா, அய்யப்பன் மற்றும் இதில் தொடர்புடைய லெனின் கருப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விரைவில், மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என, உயர் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணையில், 'மார்பிங்' முறையில், ஆபாச படம் தயாரித்தது தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us