ADDED : மே 26, 2026 05:09 AM
மாணவி கொலை வழக்கு கடந்து வந்த பாதை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொலை வழக்கில் சூழ்நிலைகள் குறித்து எந்த தடயமும் முதலில் கிடைக்காததால், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
அறிவியல் பூர்வமாக, 98 கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். 2,574 மொபைல் போன் அழைப்புகளை கண்காணித்து விசாரணை நடத்தினோம். கிராமத்தில் உள்ள, 461 பேரிடம் நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் தனித்தனியே விசாரணை நடத்தினோம். சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம்.
மாணவியின் பிரேத பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளும், கைதான தர்ம முனீஸ் வரனிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி மூலம் நடத்தப்பட்ட 'டிஎன்ஏ' சோதனையில் கிடைத்த முடிவுகளும் ஒத்து போனது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்தோம்.
விரிவான விசாரணைக்கு பிறகு, 21 நாட்களில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். விசாரணை நடவடிக்கைகள், 54 நாட்களில் முடிக்கப்பட்டன. இந்த தீர்ப்பு, குற்றவியல் நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
