sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் வழக்கு விசாரணை மே 8ம் தேதி ஒத்திவைப்பு

/

சீமான் வழக்கு விசாரணை மே 8ம் தேதி ஒத்திவைப்பு

சீமான் வழக்கு விசாரணை மே 8ம் தேதி ஒத்திவைப்பு

சீமான் வழக்கு விசாரணை மே 8ம் தேதி ஒத்திவைப்பு


ADDED : ஏப் 18, 2025 03:07 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணை, விக்கிரவாண்டி கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசினார்.

இது குறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் கஞ்சனுார் போலீசில் புகார் செய்ததின் பேரில், வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார். சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர் பேச்சிமுத்து ஆஜராகி , சீமான் வழக்கில் ஆஜராகாததற்கு மனு அளித்தார். மனுவை ஏறறுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார்.






      Dinamalar
      Follow us