sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

/

திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

திராவிட குப்பை எங்களுக்கு உரமாகும்; சீமான் பேச்சு

19


ADDED : ஜன 29, 2025 10:44 AM

Google News

ADDED : ஜன 29, 2025 10:44 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திராவிட குப்பைகளை உரமாக்கி, தமிழ் தேசிய மரத்தை பெருமரமாக்கி விட்டு தான் போவோம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.

பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம், ஆளும் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் இடையே நேரடி போட்டியாக மாறி உள்ளது. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

என் இன வரலாற்றை திராவிட குப்பையை போட்டு மூடி வைத்துள்ளனர். அதன் மீது பற்ற வைத்த நெருப்பு தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது. என்னை எதிர்கொள்ள முடியவில்லை.

அப்பாவும் (முதல்வர் ஸ்டாலின்), மகனும் (உதயநிதி) விழுப்புரத்தில், திண்டிவனத்தில் பேசுவது வேண்டாம். எல்லாரும் இங்கு வந்து ஈரோட்டில் பேசுங்கள்.

இவ்வாறு சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென எழுந்து நின்று சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சாட்டை துரைமுருகன், ஹூமாயுன் ஆகியோர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தவரின் அருகில் சென்றனர்.

அவரிடம் பேசும் போது மேடையில் இருந்து கைகாட்டி சீமான் குறுக்கிட்டார். பின்னர் ஹூமாயுன் எதிர்ப்பாளரை கைகளை பிடித்து அழைத்து வந்து முதல் வரிசையில் அமர வைத்தார்.

தொடர்ந்து சீமான் பேசியதாவது: நாங்கள் திராவிட குப்பைகளை உரமாக்கி, தமிழ் தேசிய மரத்தை வளர்க்க வந்த பிள்ளைகள். பெருமரமாக்கிவிட்டு தான் போவோம்.

சாதி, மதம் என பிளந்து பிரிந்து நின்றீர்கள் என்றால் அச்சுறுத்தப்படுவீர்கள், தனிமைப்படுத்தப்படுவீர்கள். இனம், மொழியாக இணைந்து நின்றீர்கள் என்றால் நீங்கள் வலிமை பெறுவீர்கள். பாதுகாப்பாக இருப்பீர்கள்.

பாதுகாப்பாக, வலிமை பெற வேண்டும் என்றால் நாங்கள் தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்துக்குள் திரள தொடங்குங்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.






      Dinamalar
      Follow us