sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; விசாரணை வரும் 22 தேதிக்கு ஒத்திவைப்பு

/

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; விசாரணை வரும் 22 தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; விசாரணை வரும் 22 தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; விசாரணை வரும் 22 தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜன 20, 2024 06:21 AM

Google News

ADDED : ஜன 20, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2006-2011ம் ஆண்டு நடந்த தி.மு.க., ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., மற்றும் உறவினர்கள் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில், அரசு தரப்பு சாட்சிகள், பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜமகேந்திரன், கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் மட்டும் ஆஜராகினர். மனு மீதான விசாரணையில், அரசு தரப்பும், எதிர்தரப்பும் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us