sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செந்தில் பாலாஜி காவல் 25வது முறையாக நீட்டிப்பு

/

செந்தில் பாலாஜி காவல் 25வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜி காவல் 25வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜி காவல் 25வது முறையாக நீட்டிப்பு


ADDED : மார் 12, 2024 01:20 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 25வது முறையாக நீட்டித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி விடுமுறை என்பதால், 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கும்படி செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி டி.வி.ஆனந்த், வரும், 13ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 25வது முறையாக வரும், 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us