sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., முப்பெரும் விழா போட்டியில் வென்ற செந்தில் பாலாஜி

/

தி.மு.க., முப்பெரும் விழா போட்டியில் வென்ற செந்தில் பாலாஜி

தி.மு.க., முப்பெரும் விழா போட்டியில் வென்ற செந்தில் பாலாஜி

தி.மு.க., முப்பெரும் விழா போட்டியில் வென்ற செந்தில் பாலாஜி


ADDED : ஜூலை 31, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., முப்பெரும் விழாவை தங்கள் மாவட்டங்களில் நடத்த, மூத்த அமைச்சர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில், அவ்விழாவை மாநாடு போல் நடத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் கூட்டத்தை விட, அதிக கூட்டத்தை முப்பெரும் விழாவுக்கு கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதனால், சில மூத்த மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்டங்களில் முப்பெரும் விழா நடத்த, கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, உளவுத்துறை ஆட்சி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

இதனால், கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், கரூரில் முப்பெரும் விழா நடத்தலாம் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி யோசனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, முப்பெரும் விழாவை மாநாடு போல கரூரில் நடத்தும் பொறுப்பு, அவரிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us