sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெள்ள நிவாரணம் கோரிய ஏழு லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: அரசு தகவல்

/

வெள்ள நிவாரணம் கோரிய ஏழு லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: அரசு தகவல்

வெள்ள நிவாரணம் கோரிய ஏழு லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: அரசு தகவல்

வெள்ள நிவாரணம் கோரிய ஏழு லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: அரசு தகவல்


UPDATED : ஜன 07, 2024 05:06 AM

ADDED : ஜன 07, 2024 01:58 AM

Google News

UPDATED : ஜன 07, 2024 05:06 AM ADDED : ஜன 07, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வெள்ள நிவாரண நிதி கோரிய, ஏழு லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுதெரிவித்துள்ளது.

வங்கி கணக்கில்


சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'மிக்ஜாம் புயலால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.

'பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 6,000 ரூபாய் நிவாரணமாக வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தும்படி உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டது.

நிவாரண தொகையை அதிகரித்து, வங்கி கணக்கு வாயிலாக வழங்கக்கோரி, சட்டக்கல்லுாரி மாணவர் செல்வகுமார் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், ஏற்கனவே விசாரணைக்கு வந்தன.

இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த முதல் பெஞ்ச், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சேர்வதை உறுதி செய்யும்படி அரசுக்கு அறிவுறுத்தி,விரிவான அறிக்கைஅளிக்கவும் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, விசாரணையை பிப்ரவரி 2க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

'டிபாசிட்'


புயலால் சில பகுதிகளில், ஏ.டி.எம்., நிலையங்கள் இயங்கவில்லை; கனமழை, வெள்ளத்தால், வங்கி விபரங்களை சேகரிக்க தாமதம் ஆகலாம் என்பதாலும், பலர் ஏ.டி.எம்., கார்டுகள், வங்கி கணக்கு விபரங்களை தொலைத்திருக்கலாம் என்பதாலும், ரேஷன் கடைகள் வாயிலாக ரொக்கமாக வழங்குவது என, அரசு முடிவெடுத்தது. 24.25 லட்சம் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி வழங்க, 1,455 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.

இதுவரை, 23.18 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர நிவாரண நிதி கோரி, 7.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடக்கிறது.

தகுதியானவர்களுக்கு, வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டுத் தொகை, 4 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us