sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்

/

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் செலுத்திய சண்முகம்


ADDED : ஆக 15, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 15, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் செலுத்திய, 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை, கல்வராயன் மலைவாழ் மக்களின் சுகாதார நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த, அனுமதி அளிக்கக்கூடாது என, சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்.

இது தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

'அபராதத் தொகையை, தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். அதை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, அபராதத் தொகையை, சி.வி.சண்முகம், நேற்று தமிழக அரசுக்கு செலுத்தினார். அத்தொகையை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கல்வராயன் மலை வட்டாரத்தில் வசிக்கும், மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சுகாதார நலத்திட்டங்களுக்கும், அங்கு நடக்கும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கும் பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us