sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி

/

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி


ADDED : ஜூலை 08, 2025 10:25 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆம்பூரை சேர்ந்தவர் பழனி,63; இவரது மனைவி பாஞ்சாலி,55; இருவரும், பண்ருட்டி அருகே கொக்குப்பாளையம் கிராமத்தில் தங்கி, குத்தகைக்கு கொய்யாத்தோப்பு எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில், அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவர், கொய்யா தோப்பில் உள்ள பழனி வீட்டில் பால்வாங்க வந்தார். கதவு உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துள்ளனர்.

அப்போது, தம்பதியர் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், பாஞ்சாலி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் பழனி சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, அவரது மகன் ரவி, புதுப்பேட்டை போலீசில் அளித்த புகாரில் 'எனது தாய் பாஞ்சாலிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் இறந்ததால் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக தந்தை கூறியிருந்ததாக' தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us