sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி கேள்வி

/

இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி கேள்வி

இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி கேள்வி

இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி கேள்வி

38


ADDED : ஜன 30, 2025 02:03 PM

Google News

ADDED : ஜன 30, 2025 02:03 PM

38


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? என முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.



இது குறித்து, ஆர்.என்.ரவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956ம் ஆண்டு கே. காமராஜர் கட்டிய பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை. காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? இவ்வாறு ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us