sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு

/

சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு

சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு

சோதனை பாதையில் சுப்மன் கில்... கிரெக் சாப்பல் கணிப்பு

1


ADDED : ஜூலை 20, 2025 07:17 AM

Google News

1

ADDED : ஜூலை 20, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: ''சுப்மன் கில் தெளிவான சிந்தனையுடன் அணியை வழிநடத்தினால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பார்,'' என கிரெக் சாப்பல் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 23ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இதில், இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும். இளம் கேப்டன் சுப்மன் கில் 25, பேட்டிங்கில் அசத்துகிறார். 3 போட்டிகளில் 607 ரன் (சராசரி 101.16) குவித்துள்ளார். தலைமை பணியில் முன்னேற்றம் தேவை.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் (ஆஸி.,) கூறியது:


கடைசி இரு போட்டிக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், அனைவரது கவனமும் சுப்மன் மீது திரும்பியுள்ளது. பேட்டிங்கில் பிரகாசிக்கும் இவருக்கு, கேப்டனாக உண்மையான சோதனை ஆரம்பமாகிறது. செயல் மூலம் ஆதிக்கம் செலுத்துவது அவசியம். தனக்கு நம்பிக்கையான வீரர்களை கண்டறிந்து, வெற்றி பெறக் கூடிய அணியை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீரரின் பணி குறித்து அவரிடம் விளக்க வேண்டும். சிறந்த அணிகள் ரன்னை எளிதில் விட்டுக் கொடுக்காது. 'கேட்ச்' வாய்ப்பை நழுவவிடாது. இந்தியாவும் 'பீல்டிங்கில்' சொதப்பக் கூடாது என்பதில் கில் கவனமாக இருக்க வேண்டும்.

பேசுவது அவசியம்


சுப்மனை பொறுத்தவரை 'பேட்' மூலம் எளிதாக பேசுகிறார். இதே போல சக வீரர்களிடம் சகஜமாக பேசி, அவர்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். பேட்டர்களிடம் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாடுவதன் முக்கியத்துவத்தை கூறலாம். பவுலர்களிடம் விக்கெட் எடுப்பது மட்டும் முக்கியமல்ல; தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தலாம். வீரர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

வரும் போட்டிகளில் சுப்மன் தெளிவான சிந்தனையுடன் வலிமையாக அணியை வழிநடத்தினால், இங்கிலாந்து தொடரின் போக்கை மட்டும் தீர்மானிக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் வடிவமைப்பார்.இவ்வாறு கிரெக் சாப்பல் கூறினார்

-------

ஜடேஜா தவிப்பு ஏன்கிரெக் சாப்பல் கூறுகையில்,''கடந்த லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜா தனிநபராக போராடினார். 'சிங்கிள்ஸ்' எடுப்பது மட்டும் இவரது பணி அல்ல. அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும். இவரிடம் கேப்டன் சுப்மன் தரப்பில் இருந்து,'டெயிலெண்டர்கள் பக்கபலமாக இருப்பர். நீங்கள் தான் 'ரிஸ்க்' எடுத்து வெற்றி தேடித் தர வேண்டும்' என சொல்லியிருக்கலாம். முன்பு லீட்ஸ் டெஸ்டில் தனிஒருவனாக ஸ்டோக்ஸ் (135 ரன்* 11 பவுண்டரி, 8 சிக்சர், 2019, எதிர், ஆஸி., ) அசத்தினார். இவருக்கு லீச் (1 ரன்*, 17 பந்து) கைகொடுக்க, ஒரு விக்கெட்டில் இங்கிலாந்து வென்றது. வெற்றியோ தோல்வியோ தனக்கு அணியின் ஆதரவு உண்டு என்பதை ஸ்டோக்ஸ் உணர்ந்திருந்தார். இது போன்று ஒரு மனநிலையை வீரர்களிடம் சுப்மன் உருவாக்குவது அவசியம்,''என்றார்.








      Dinamalar
      Follow us