ADDED : செப் 06, 2025 02:58 AM

கம்பம்: தேனி மாவட்டம், கம் பம் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில், 11,000 ஏரிகள், கண்மாய்களை துார் வாரினோம். அதில் கிடைத்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2 4 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். இன்று சுழற்சி முறையில் சப்ளை தருகின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரை நோக்கி, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு நிலவரத்துக்கு இதுவும் சான்று. அ.தி.மு.க., அரசில் சட்டத்தின் ஆட்சி நடந்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் 52 லட்சம் குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அந்த திட்டம் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மணமகனுக்கு பட்டு வேட்டி சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை என்று அறிமுகம் செய்யப்படும்.
தி.மு.க., ஒரு கம்பெனி. அந்த குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் தான் பொறுப்பிற்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்போது இன்பநிதியும் வந்து விட்டார். கருணாநிதி என்ன ராஜ பரம்பரையா? அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.