sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கத்துடன் பட்டு சேலை வழங்கப்படும்: பழனிசாமி

/

தங்கத்துடன் பட்டு சேலை வழங்கப்படும்: பழனிசாமி

தங்கத்துடன் பட்டு சேலை வழங்கப்படும்: பழனிசாமி

தங்கத்துடன் பட்டு சேலை வழங்கப்படும்: பழனிசாமி


ADDED : ஜூலை 23, 2025 03:01 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தாலிக்கு தங்கம் திட்டத்தில், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பட்டு சேலை இலவசமாக வழங்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் வந்த பழனிசாமி, அங்கு நெசவாளர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைளை கேட்டறிந்தார்.

நெசவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:


தி.மு.க., ஆட்சியில், நெசவாளர்கள், விவசாயிகள் என யாருக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள் சேவை செய்யும் கட்சி என்றால், அது அ.தி.மு.க., மட்டும் தான். நான் பிரசார பயணம் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் என்னை வரவேற்கின்றனர். அதனால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், நெசவாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மீண்டும் முழு வேகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டத்தில், நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளையும் இலவசமாக வழங்க திட்டம் வைத்துள்ளோம். அதை செயல்படுத்தி, நெசவாளர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்.

நெசவாளர்களுக்கு, அரசு வழங்கும் மானியம் உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு, பசுமை வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us