sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி

/

மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி

மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி

மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி

18


UPDATED : ஏப் 03, 2025 12:48 PM

ADDED : ஏப் 03, 2025 11:40 AM

Google News

UPDATED : ஏப் 03, 2025 12:48 PM ADDED : ஏப் 03, 2025 11:40 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 04) நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் உள்ளது. நாளை கும்பாபிஷேக நடைபெறும் நிலையில், நேற்று இந்த வெள்ளிவேல் திருடு போனது. சாமியார் வேடத்தில், சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளிவேலை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us