sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்

/

தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்

தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்

தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்


ADDED : நவ 15, 2025 10:30 PM

Google News

ADDED : நவ 15, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக இதுவரை 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமானது நடந்து முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. வாக்காளர்கள் இடம்பெயர்தல், மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலில் இருந்து நீக்கவும், 18 வயதை எட்டியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளை தேர்தல் கமிஷன் வேகப்படுத்தி உள்ளது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.

முதல் கட்டமாக பீஹாரில் இந்த பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. நவ.4ல் தொடங்கியுள்ள இந்த பணிகள் டிச.4ம் தேதி முடிகிறது.

இந்நிலையில் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. சதவீதம் அடிப்படையில் இது 92.04% ஆகும்.

இந்த பணியில் 68,467 பூத் லெவல் அதிகாரிகளும், 2,37,390 பூத் லெவல் முகவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்.27, 2025ம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இதுவரை 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, 92.04% வாக்காளர்களுக்கு விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு விட்டன.






      Dinamalar
      Follow us