sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

/

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி


ADDED : பிப் 08, 2024 10:06 PM

Google News

ADDED : பிப் 08, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, பல்வேறு ஊட்டச்சத்து திட்டங்களுக்கு சிறுதானியங்களை வழங்குகிறது. அதற்காக, தமிழக விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தரும் பணியை, நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்து உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல், கடந்த டிசம்பரில் துவங்கியது. இதற்காக விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய கேழ்வரகுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 3,846 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுவரை, 150 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் சீசன் இம்மாதம் முடிவடைகிறது.

எனவே, ஆண்டு முழுதும் கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு வாணிபக் கழகம், இந்திய உணவு கழகத்திடம் கேட்டது.

அதனால், ஆகஸ்ட் வரை அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us