ADDED : ஜன 08, 2024 05:59 AM
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கதக்க எரிசக்தி உட்பட, 35க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஒப்பந்தங்கள்மேற்கொண்டு பணியாற்றி வருகின்றன.
இந்த மாநாடு வாயிலாக, சோலார் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் இணைந்து பணியாற்ற, புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளன.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் இணைந்து பணியாற்றிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பர்ஸ்ட் சோலார் உட்பட பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய விரைவில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் ஏற்கனவே முதலீடு செய்து வரும் அமெரிக்கா நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், புதிய நிறுவனங்கள் முதலீடுகளை துவங்கவும்திட்டமிட்டுள்ளன.
- கிறிஸ்டோபர் டபிள்யூஹோட்ஜஸ்,
அமெரிக்க துணை துாதர்.