sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

/

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து


ADDED : டிச 07, 2025 02:16 AM

Google News

ADDED : டிச 07, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: “சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும்,” என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:

வழிபாட்டு விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒருமுறை பழனி சென்றபோது, 'தமிழகத்தில் கடவுள் என்றால் முருகனாக இருக்கலாம்' என கூறினார். அந்த வகையில், தமிழ் மண்ணோடும், உணர்வோடும் தொடர்புடையவர் முருக கடவுள்.

எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசு, இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் தீபம் ஏற்ற முயன்றால், தடுக்க போலீசாருக்கு உரிமையுண்டு. ஆனால், நீதிமன்ற உத்தரவுடன் சென்றவர்களை தடுத்துள்ளனர்.

அரசின் நிலைப்பாட்டால் போலீசாருக்கும், நீதிபதிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும்.

தீபத் துாணில் தீபம் ஏற்றுவதால், முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. திருப்பரங்குன்றம் விஷயத்தை, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ் உணர்வோடு, இயற்கை வழிபாட்டு முறையாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us