ADDED : பிப் 19, 2025 12:41 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலையரங்கம், கட்டடங்களை புதுப்பிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், டில்லி தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டடம் ஆகியவற்றை புதுப்பிப்பதற்காக, தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின்தலைமைச் செயலகத்தில், டில்லி தமிழ் சங்கத்தின் தலைவர் சக்திபெருமாள், சண்டிகர் தமிழ் மன்ற பொதுச் செயலர் ராஜசேகர் மற்றும் அதன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
