ADDED : ஜன 08, 2024 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய, உலக முதலீட்டாளர் மாநாடு, இன்று நிறைவு பெற உள்ளது. நேற்று மாநாட்டு நிகழ்வுகளை, 38 மாவட்டங்களில் உள்ள, 40 லட்சம் மாணவ - மாணவியர், தங்கள் மொபைல் போன் வாயிலாக பார்க்க வசதி செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய கல்லுாரிகள், மாவட்ட தொழில் மையங்கள், டிட்கோ வளாகம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், 1.60 லட்சம் மாணவ - மாணவியர் மாநாட்டு நிகழ்வுகளை, எல்.இ.டி., திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநாடு தொடர்பான வாட்ஸாப் செய்திகள், 45 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வுகளை, மாணவ - மாணவியர் காண, இந்தியாவில் முதல் முறையாக நேற்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.