sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 3ம் நாளாக போராட்டம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 3ம் நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 3ம் நாளாக போராட்டம்


ADDED : ஜன 24, 2026 06:13 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட, சிறப்பு பயிற்றுனர்களைப் போலீசார் கைது செய்தனர் .

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் சிறப்பு பயிற்றுனர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மூன்றாம் நாளாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, 200க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களை பஸ்சில் ஏற்றி, அண்ணாநகரில் உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, சிறப்பு பயிற்றுனர்கள், பஸ்சில் இருந்து இறங்க மறுத்தனர்.

இதனால் கோபமடை ந்த போலீசார் மற்றும் டிரைவர், பஸ் கதவை மூடி விட் டு, கீழே இறங்கி சென்றனர். அப்போது பஸ்சிலிருந்த, சிறப்பு பயிற்றுனர் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதும், போலீசார் கதவை திறந்தனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us