sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

/

ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

7


ADDED : ஏப் 24, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 04:45 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி - இலங்கை இடையே, கடலில் ராமர் அமைத்த பாலத்தைக் கண்டு தரிசிக்க, மே, 15ல் இலங்கை அரசு, சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.

கடலில் பாலம் அமைத்து, சீதையை ராமர் மீட்டு வந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில், சுற்றுலா பயணியர் ராமர் பாலத்தைக் கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை - இலங்கை தலைமன்னார் இடையே, 29 கி.மீ., உள்ள கடல் பகுதியில், ராமர் பாலம் மீது, 14 முதல் 18 மணல் தீடைகள் உள்ளன. அரிச்சல் முனையில் இருந்து, 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்து விடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளன.

ராமர் பாலத்திற்கு படகு இயக்க, இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், மே, 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர்.

இதன் வாயிலாக, உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணியரையும் கவர்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us