sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

/

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

67


ADDED : மார் 05, 2025 11:55 AM

Google News

ADDED : மார் 05, 2025 11:55 AM

67


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; பிரதமருக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பா.ஜ., கூறுவது உண்மை என்றால் தேஜஸ், வந்தே பாரத் ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்;

பிரதமர் தமிழ் மீது அதீத அன்பு கொண்டவர் என்று பா.ஜ., கூறுவது உண்மை என்றால் அது ஏன் செயலில் பிரதிபலிக்கவில்லை? பார்லி.யில் செங்கோலை நிறுவுவதை விட தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து ஹிந்தியை நீக்கவும், வெற்று புகழுக்கு பதிலாக ஹிந்திக்கு இணையாக தமிழை ஆட்சி மொழியாக்குங்கள். சமஸ்கிருதம் போன்ற மொழிக்கு ஒதுக்குவதை விட கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.

திருவள்ளுவரை காவி நிறமாக்கும் அவநம்பிக்கையான முயற்சிகளை நிறுத்தி, அவரது காலத்தால் அழியாத உன்னதமான திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட்டின் போது குறள்களை மேற்கோள் காட்டுவதுடன் நின்றுவிடாமல், சிறப்பு திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி, புதிய ரயில்வே திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயங்கும் அந்த்யோதயா, தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களை திணிப்பதை நிறுத்துங்கள். தமிழகத்தின் ரயில்களில் செம்மொழி, முத்துநகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் போன்ற தமிழ் பெயர் வைக்கும் நடைமுறைக்கு திரும்ப வேண்டும். தமிழ் மீதான பற்றை செயல் மூலம் நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us