ADDED : டிச 05, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்த, கேரள முதல்வருக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், 'பெஞ்சல் புயல் பேரழிவில் இருந்து, மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே, நமது எண்ணங்கள் உள்ளன.
இந்த சவாலான நேரத்தில், கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான உதவிகளை வழங்க, கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றுபட்டு பாதிப்பை முறியடிப்போம்' என தெரிவித்திருந்தார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.