sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

/

படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்


ADDED : மே 06, 2025 07:23 AM

Google News

ADDED : மே 06, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும், இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடித விபரம்:

சமீப காலமாக, இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையை சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2ம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, 23 மீனவர்கள் மற்றும் 5 நாட்டு படகுகள், வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடம், இப்பிரச்னையை எடுத்து சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறை பரிந்துரைப்படி, செயற்கை பவளப்பாறை அமைப்புகளை உருவாக்குவதற்காக, இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 34 மீன்பிடி படகுகளை உடைத்து, கடலில் மூழ்கடிக்க உள்ளனர்.

எனவே, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us