sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை

/

எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை

எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை

எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை டில்லி அழைத்து சென்று விசாரணை


ADDED : மார் 22, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 22, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினரை கைது செய்த அமலாக்க துறையினர், டில்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுச்செயலர் ராஜிக், உறுப்பினர் வாஹித்துார் ரகுமான் வீடுகளிலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள பழக் கடையில் ரீலா என்பவரிடமும், மத்திய அரசின் அமலாக்க துறையினர், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

பழக்கடையில் சிறிது நேரம் சோதனை முடிந்த பின், ராஜிக், வாஹித்துார் ரகுமான் ஆகியோர் வீடுகளிலும், காலை முதல் மாலை வரை, அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் -2வது வீதியில் வசிக்கும் வாஹித்துார் ரகுமான், 27, என்பவரிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

இதில் சட்ட விரோதமாகபண பரிவர்த்தனையில், அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அமலாக்க துறை அதிகாரிகள், வாஹித்துார் ரகுமானை கைது செய்து, விமானத்தில்டில்லிக்கு அழைத்துசென்றனர்.

அங்கு விசாரணைக்கு பிறகு, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us