sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பாலாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

/

'பாலாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

'பாலாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

'பாலாறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

1


ADDED : ஆக 13, 2025 01:47 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: ''பாலாறு மாசுபடுவதை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும், 'தாயுமானவர்' திட்டத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்த நிலையில், வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் திட்டத்தை துவக்கி வைத்து, வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

கேள்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது, தி.மு.க., கொண்டு வந்த ஏரி துார்வாரும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசியுள்ளாரே?

அமைச்சர்: ஊருக்கு ஒரு ஏரியையாவது, அவர்கள் துார்வாரி இருப்பார்களா... பணத்தை ஒதுக்கினரே தவிர, ஒன்றை கூட துார்வாரவில்லை. இந்தாண்டு நாங்கள் துார்வாரிய ஏரியின் லிஸ்ட் எங்களிடம் உள்ளது. இது குறித்து, அப்போதே நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். துார்வாரிய ஏரியை வந்து காட்டுங்கள் என்றேன். எதற்கும் பதில் இல்லை.

கேள்வி: பாலாற்றை மாசுபடுத்தும் வகையில், கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?

அமைச்சர்: அதில் ஒன்றும் மாற்றுக்கருத்து இல்லை. பாரபட்சமின்றி கண்டிப்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: இந்த ஆட்சியில், அணைக்கட்ட, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், ஆனால் எதையும் கட்டாமல், தி.மு.க., ஏமாற்றுவதாக பழனிசாமி பேசியுள்ளாரே?

அமைச்சர்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை, எத்தனை அணைகளை கட்டி உள்ளோம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளேன். சும்மா வீம்புக்கு பேசுகிறார் அவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us